Sunday 6 March 2011

நான் லூசா??

நான் பொய் சொல்கிறேன்
என்று உனக்கு நன்றாக தெரியும்..
இருந்தும் நான் சொல்கின்ற
கட்டு கதைகளுக்கெல்லாம்
ஒ..ம்ம்..அப்புறம் என்று தலையாட்டி கொண்டிருப்பாய்..
...சற்று நேரத்தில்
நிதானம் இழந்த நீ
"போடா லூசு" என்று என்னை திட்டிவிடுவாய்..

நீ திட்டியதும்
சோகமாய் இருப்பது போல் நடிப்பேன்..
என்னை ஆறுதல் படுத்த
நீயும் என்னென்னவோ செய்வாய்..
இறுதிகட்ட முயற்சியாக
வேறு வழியின்றி
என் இதழில்,உன் இதழ் பொருத்தி
முத்தமிடுவாய்!!

அப்போது உன் காதருகில் சொல்வேன்..
"இப்ப சொல்லு நா லூசா??புத்திசாலியா"??

0 comments:

Post a Comment