Sunday 6 March 2011

ஒற்றை ரோஜா

என் காதலியின்
பிறந்த நாள் நெருங்குகின்றது..
பலி கொடுத்து விடுவானோ
என்ற பயத்தில்
என் வீட்டு ஒற்றை ரோஜா!!

ஆட்டினை பலிகொடுப்பதற்க்கு முன்
பூசாரி தண்ணீர் தெளிப்பதனை போல
நான் ஒவ்வொரு முறை
என் வீட்டுக்கு ரோஜா செடிக்கு
தண்ணீர் விடும் போதும்
ரோஜா செடி
சம்மதம் தெரிவிக்காமல்
உயிர்பயத்தில்
தன் மூச்சினை
இறுக்கமாக அடக்கி வைத்து கொள்ளும்...

1 comments:

சிவசங்கர். said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
அருமையான வரிகள்...

Post a Comment